மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...
நண்பர்களே... பணம் - இது என்னென்ன வேலைகள் செய்கிறது என்பதைப் பற்றிப் பாடல்கள் மூலமாகப் பார்ப்போம். இணையத்தில் பல பாடல்கள் இருந்தாலும் அவற்றில் எனக்குப் பிடித்த சில பாடல்களில் எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் கீழே கொடுத்துள்ளேன். அடைப்புக் குறிகளில் என்னுடைய கருத்தும் கூறியுள்ளேன். அந்தக் காலக் கவிஞர்கள் முதல் இந்தக் காலக் கவிஞர்கள் வரை, எழுதிய பாடல்கள் பற்றி ஒரு சின்ன தொகுப்பு...